Saturday 19 December 2015

தமிழகத்தின் சொத்து தாமிரபரணி 13 - {நமது தாமிரபரணி நதியின் வரலாறு மற்றும் அதன் அழிவுப்பாதை பற்றிய தொடர் }

முந்தைய பாகம்-12 ற்கு லிங்க்
 
http://gowthamthamizhan.blogspot.in/2015/12/12.html
 
தொடர்-13


தாமிரபரணியும் வெள்ளப் பெருக்கும்

தாமிரபரணி ஆற்றில் பல்வேறு காலகட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.1810-ல் ஏற்பட்ட வெள்ளத் தில் கரையோரத்தில் இருந்த ஆயிரத் துக்கும் மேற்பட்ட வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. ஆழ்வார்குறிச்சியில் மட்டும் 500 வீடுகள் சேதம் அடைந்தன. உயிர்சேதமும் ஏற்பட்டது. 1827-ல் ஏற்பட்ட வெள்ளம் திருநெல்வேலி நகரை மூன்று நாட்களுக்கு தன்பிடியில் வைத்திருந்தது. வைகுண்டம் கோயிலையும் வெள்ளம் சூழ்ந்தது. மூன்று நாட்களாக சிலர் கோயில் கோபுரத்தில் ஏறி உயிர் பிழைத்தனர்.
1869-ம் ஆண்டு வெள்ளத்தில் பாலங்கள் சேதமடைந்தன. வைகுண் டம் பாலத்துக்குமேல் 5 அடி உயரத் துக்கு தண்ணீர் ஓடியது. 1874-ல் பயிர்கள் சேதமாகின. 1877-ல் டிசம்பர் 6-ம் தேதி நள்ளிரவில் திருநெல் வேலி கொக்கிரகுளம் ஆட்சியர் அலுவல கத்தை வெள்ளம் சூழ்ந்தது. அதே ஆண்டு, டிசம்பர் 17-ல் மீண்டும் வெள்ளம் சூழ்ந்தது. 1895 வெள்ளத்தில் தைப்பூச மண்டபத்தில் இருந்த 18 பேர் அடித்துச் செல்லப்பட்டார்கள். அவர் களில் ஒரு சிறுவன் மட்டும் உயிர் தப்பினான். கடைசியாக 1992-ல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சேர்வலாறு பாலம் அடித்துச் செல்லப்பட்டது.

4 மாவட்டங்களின் குடிநீர் ஆதாரம்
 


திருநெல்வேலி, தூத்துக்குடி, விருது நகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் சுமார் 75 லட்சம் பேருக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது தாமிரபரணி. தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம் நாள்தோறும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர், குழாய்கள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. திருநெல்வேலி மாநகராட்சியில் மட்டும் சுமார் ஐந்து லட்சம் மக்களின் தாகம் தீர்க்கிறது நதி. நகரில் மொத்தம் 12 தலைமை நீரேற்று நிலையங்களில் 46 நீர் உறிஞ்சு கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது.
வண்ணாரப்பேட்டை வந்த கதை
திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையின் முந்தைய பெயர் குஷ்டந்தீர்ந்ததுறை என்பதாகும். இதுகுறித்து ஓய்வு பெற்ற தமிழ் பேராசிரியர் முனைவர் வே. மாணிக்கம் கூறும்போது, “புதுமைப்பித்தன்விநாயகர் சதுர்த்திஎன்று ஒரு கதை எழுதினார். அதில், தான் பிறந்த ஊருக்கு வண்ணாரப்பேட்டை என்று பெயர் வந்த காரணத்தை எழுதியிருப்பார். “...கும்பனிக்காரன் வந்த புதுசு, அந்தக் காலத்திலே சுலோசன முதலியார் பாலம் கட்டலே, நம் சாலை தெருதான் செப்பரை வரைக்கும் செல்லும். அங்கேதான் ஆற்றை கடக்க வேண்டும்.
கொக்கிரகுளத்தில் இப்போது கச்சேரி இருக்கே அங்கேதான் கும்பினியார் சரக்குகளை பிடித்துப் போடுமிடம். அந்த வட்டாரத்திலே நெசவும் பாய் முடைகிறதும் ரொம்பப் பிரபலம். அப்பொழுது இருநூறு வண்ணார்களை குடியேற்றி வைத்தான் கும்பனிக்காரன். அதன்பிறகு குஷ்டந்தீர்ந்ததுறை வண்ணாரப்பேட்டை என்று ஆயிற்றுஎன்று எழுதியிருப்பார்.
திருநெல்வேலியில் தாமிரபரணியின் நீராடும் துறைகளின் அடிப்படையில் கருப்பந்துறை, குறுக்குத்துறை, சிந்துபூந்துறை என்று பல ஊர்கள் அமைந்துள்ளன. புதுமைப்பித்தன் குறிப்பிடும் குஷ்டந்தீர்ந்த துறை ஆற்றங்கரையில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோயிலின் பின்பக்கம் அமைந்துள்ளது. அந்தக் கோயிலில் குட்டத்துறை சுப்பிரமணியசாமி திருக்கோயில் என்று எழுதியிருப்பதை காணலாம்.
குஷ்டந்தீர்ந்த துறை என்பதன் திரிபு இது. குட்டம் என்பது ஒருவகை தோல் நோய். தாமிரபரணி ஆற்றில் உள்ள மீன்கள் தோல் நோயைப் போக்குபவை. அக்காலத்தில் சிரங்கு நோய்க்கு தீர்வு ஆற்றுநீரில் சிறிதுநேரம் நிறுத்தி வைப்பதுதான்என்றார்.

தாமிரபரணி: தண்ணீர் உறிஞ்சும் ஆலைகளால் தடுமாறும் விவசாயம்

 

தாமிரபரணி ஆற்றின் தண்ணீர் விவசாயம், குடிநீர் தேவை களுக்கே போதுமானதாக இல்லை. இந்த நிலையில் தொழிற்சாலைகளுக் கும் குறைந்த விலையில் தண்ணீர் வழங் கப்படுகிறது. இதுதொடர்பான பிரச்சி னைகள் தொடர்கதையாக நீள்கின்றன.
தாமிரபரணியில் இருந்து தொழிற் சாலைகளுக்குத் தண்ணீர் எடுப்பதால் விவசாயம் பாதிக்கப்படுவதுடன், அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.100 கோடி இழப்பு ஏற்படுகிறது என்கிறார்கள் விவசாயிகள். தாமிரபரணி தண் ணீரை தூத்துக்குடி பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு ஸ்ரீவைகுண் டம் அணை வடகால் மூலம் வழங்கு வதற்காக 1970-ம் ஆண்டு ரூ.4.70 கோடியில் 20 எம்.ஜி.டி. திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 30 லட்சம் கனஅடி தண்ணீர், ஸ்ரீவைகுண்டம் அணையின் வடகாலில் இருந்து தூத்துக்குடி பகுதியில் 8 தொழிற்சாலைகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
 


தொழிற்சாலைகளுக்கு செல்லும் தண்ணீர்
 
இதனால், தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 35 ஆண்டுகளாக கார் சாகுபடிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. முன்கார் சாகுபடியும், பிசான சாகுபடிக்கும் கூட தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த இரு ஆண்டுக்கு முன்பு விவசாயிகளின் எதிர்ப்புகளையும் மீறி மேற்கண்ட திட்டம் 23 எம்.ஜி.டி. திட்டமாக விரிவு செய்யப்பட்டு அணை தண்ணீர் எடுக்கப்படுகிறது.
தாமிரபரணி நதி நீர் உரிமை, பொதுப் பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்புக்கே சொந்தம். இங்கி ருந்து தண்ணீர் எடுக்க பொதுப்பணித் துறையுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும். ஆனால், அந்தத் திட்டத்துக்கு எந்தவித ஒப்பந்தமும் செய்யாமல் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் கடந்த 40 ஆண்டுகளாக தண்ணீர் எடுத்து வருகிறது என்கிறார்கள் விவசாயி கள். 1,000 லிட்டரை 50 பைசா வீதம் விலைக்கு வாங்கும் குடிநீர் வடிகால் வாரியம், அதனை சுத்திகரித்து தொழிற் சாலைகளுக்கு 1,000 லிட்டருக்கு ரூ. 15 வீதம் விற்பனை செய்கிறது. ஒரு நாளைக்கு 20 மில்லியன் காலன் லிட்டர் வீதம் ஆண்டுக்கு 3,31,85,800 கனமீட்டர் என ஆண்டுக்கு ரூ.1,65,92,300-க்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த வகையில் பொதுப்பணித் துறைக்கு சுமார் ரூ. 83 கோடி வரை தமிழ்நாடு குடிநீர் வாரியம் பாக்கி செலுத்த வேண்டியிருக்கிறது.
சென்னையில் கடல் நீரை குடிநீராக்கி 1,000 லிட்டர் தண்ணீர் ரூ.49 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் அரசுக்கு ரூ.100 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுகிறது என்கிறார்கள் விவசாயிகள்.
தொழிற்சாலைகள் தரப்பில் பேசிய வர்கள், “இந்தப் பகுதியில் கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் செயல் படுத்தப்படவுள்ளது. இதற்காக அரசு நிதி ஒதுக்கிவிட்டது. நிலம் தேர்வு செய்யும் பணிகள் நடக்கின்றன. எனவே விரைவில் பிரச்சினைக்கு தீர்வு ஏற் படும்என்கிறார்கள்.


                                                                                                          இன்னும்  ஓடுவாள்

No comments:

Post a Comment