நீ தாவணியிட்டு , பாதம் தரையில் பட
நடந்து வருகையில் தான் தெரிந்தது
தேவதைகள் பூமியில் கூட இருக்கிறார்கள் என்று...
உன் கால் கொலுசு தெரிந்திட பாவாடையைக் கையில் பற்றி
முன்குதிகாலில் , வரப்பில் ஓடி வந்ததைக் கண்டு தான்
அத்தனை நெற்பயிரும் மயங்கிச் சாய்ந்ததோ...!
நீ பின்னிய கூந்தல் உன் இடை வரை தொங்கிக்கொண்டு,
நீ ஆடுகிற படியெல்லாம் அதுவும் ஆடிடுதே....?
அது நானாகக் கூடாதா.....???
"இந்தா பிரசாதம்..."
என்று நீ கொடுத்த பாதி லட்டு வழக்கத்தை விட அதிகமாய் இனிக்கிறதே..!!
ஏன்..??
நீ சாப்பிட்ட மிச்சம் அது என்பதாலா..???
இல்லை.....
திருப்பதியில் சக்கரை அதிகம் சேர்க்க ஆரம்பித்துவிட்டார்களா...???
நிச்சயம் முதலாவதாகத்தான் இருக்கும்...
Haaahaa idhu super :)
ReplyDelete